உனக்காகப் படைக்கப் பட்ட
கவிதைகளெல்லாம்
நீ வாசித்த பின்னே
பிறவிப் பலனை
பெறுகிறது..!
*****
ஒற்றை துளியில்
ஓர் கவிதை
உந்தன் பொட்டு..!
*****
உன்னோடு நான்
ரசித்த காட்சி திரையில்
உன் நினைவோடு
அசைபோட்டு கொண்டிருகிறேன்
உந்தன் நினைவுகள்
என் திரையில்..!!!
*****
நீ பயணிக்கையில்
உன்னோடு நானும்
பயணிக்கிறேன்..
காற்றோடு உன்
கூந்தலை உரசிய படி..!!
****